மலராத
மாலையில்
புரியாத ராகம்.
அறியாத
மெட்டில் பொருந்தாத
வரிகள்..
பார்த்தும்
காத்தும் வேர்த்து
வெறுத்த விழிகள்..
பேசத் துடித்த
செவ்விதழ்கள்
உலர் நிலையில்..
பொறுமை
கலைத்த பொன்
மாலையிது.
என்னாச்சு
ஏதாச்சு எனும்
ஏக்கங்கள்..
பார்வையில்
கவிதை. இவளுக்கோ
புரியாத போதை..
காதலின்
ரணங்கள்
சுகமா?சுமையா?
ஆக்கம் கவிஞர்தயாநிதி