சுடராய்……


ஓடி ஒழியாது
களமாடிய வீர
வேங்கைளை
மனதினில் நிறுத்தி
வணங்குவோம் வாரீர்.
மே 18 இல்
உயிர் நீத்த
உறவுகளை ௭ண்ணி
உள்ளம் உருகி
தொழுவோம் வாரீர்
மண்ணிண்
விடியலுக்காகவே
உணர்வுகளை
ஒறுத்து உயிர் நீத்த
உத்தமரை
கும்பிடுவோம் வாரீர்
௭ங்கள் வாழ்வுக்கு
ஒளி ஏற்றிய
புனிதர்களின் நினைவுகளோடு
உறுதி ௭டுப்போம் வாரீர்.
தாயக விடுதலை
விடுகதையல்ல விருட்ஷமாக்குவோம்
என்று சொல்லியே
சுடரேற்றி சபதமெடுப்போம்
வாரீர் முள்ளி வாய்க்கால் முடிவல்ல.

ஆக்கம் கவிஞர் தயாநிதி