சுடும்.


பொறுமைக்
கோடுகளை
தாண்டினால்
வார்த்தை கீறல்களை
தாங்கத்தான் வேண்டும்.
தோட்டா
வலிக்கு நிவாரணம்
தாராளம்.
சிந்திய
வார்த்தைகளின்
வலிகளுக்கு ஏதுண்டு.?
நாவினால்
சுட்ட புண்
ஆறாதென்றோர்
முது மொழி
மெய்யன்றோ..!
பதமடி
நின்றால் மகமாயி
படம் காட்டினால்
பத்திரகாளி.
நாவுக்கு
நங்கூரம்
இடுவதே
இருபாலாருக்கும்
சாலச்
சிறப்பாகும்…

ஆக்கம் கவிஞர் தயாநிதி