சுணக்கமின்றி..

இணக்கம்
கண்ட நாள் தொட்டு
சுணக்கம்
இன்றியே நித்தம்
நீ பரிமாறும்
வணக்கங்கள்…
பேரானந்தம்..
உறக்கம்
குலையும்
கிறக்கம்
கலையும்
ஆனாலும் உள்ளூர
வணக்கம்
பேரானந்தம்.
உயிர்ப்பின்
உறுதியை
உணர்த்தும்
உன்னத வணக்கம்
உண்மையில்
பேரானந்தம்..
முகம்
காணாத
முகநூல்
உறவுகளாயினும்
அகம்
நிறைத்து
கூறும் வணக்கம்
பேரானந்தம்.
சிலருக்கு
பிடிக்கும்
சிலருக்கு
வலிக்கும். இன்னும்
சிலருக்கு
வதைக்கும்
ஆனாலும்
பேரானந்தம்..
வணக்கம்
சொல்வோம்
அன்பாய்
சொல்வோம்
தமிழில்
சொல்வோம்
வணக்கத்திலாகுதல்
வாழட்டும்
எங்கள் தமிழ்
அதுவே பேரானந்தம்.

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி