சுயநலம்!கவிதை ஜெசுதா யோ

புரியாத நட்புக்கள்
தெரியாத முகங்கள்
மகிழ்வோடு சில நேரம்
மரணத்தோடு சில நொடிகள்
போராடும் முகநூல் களம்..

உண்மையோடு பொய் கலந்து
உலகம் சுற்றும் தனித் திறன்
உயிர் நட்பென்றாலும்
உள்ளுக்குள் ஓர் நெருடல்…

சிலர் தந்த வலி
பிறர் மேல் வந்த ஐயம்
பேசும் போது தேன்
பிரியும் போது என்ன ?..

அறியாத மனம்
புரியாத கேள்வி
பிறந்தோம் என்றில்லாது
பொதுநலம் நோக்கி
சுயநலம் போக்கி
பூமியில் பிறந்தபயனை
முடிந்தளவு சீராக்கு….மனிதமே….

ஆக்கம் ஜெசுதா யோ