*சென்று விடு சீக்கிரம் *

ஏகாந்தமான நட்டநடு-இரவினிலே,
என்னவள் என்னருகில் இருக்கையிலே,
ஏனடி நீயும் கள்ளத்தனமாய் வந்து,
என் கண்ணுறக்கம் கலைத்துமே
என்னை நிதமும் வஞ்சிக்கிறாயோ?.
*
எந்தன் அழகிய முன்நாள் காதலியே.
எத்தனையோ இனிய இரவுகளை- நீ
எவருக்குமே இதுவரையும் தெரியாமல்,
என்னை உந்தன் அரவணைப்பில் இட்டு,
ஏகசுகம் தந்திருப்பாய், மறப்பேனா அதை.
*
என் உணர்வில் கலந்த எந்தன் காதலியே!
எந்த நாளிலுமே உந்தன் நினைவுகளை,
எந்தன் மனதில் இருந்து யாராலும் இங்கே
எடுத்தெறிந்து விட முடியாது. அறிவாயா ?
*.
எனக்கென ஒருத்தி இன்று வந்த பின்னும்
எழிலோவியமே இனியொரு போதும் -நீ
என்னை தொந்தரவு செய்யாதே, பெண்ணே!
என்னவள் விழித்தால், கலங்கிடுவாள்-பாவம் .
*
ஏராளம் இளைஞர்கள் உனக்காய் இங்கே
ஏங்கித் தவித்திருபார்கள், நீயும் அவர்களை
ஏற்றுக்கொண்டு களித்திரு கண்மணியே!
என்னை மட்டும் விட்டுவிடு பெண்ணவளே!
*.
எனக்காகவே தரையிறங்கி வந்த அழகியே!
எந்தன் வான் நிலவே! சென்றுவிடு சீக்கிரம்.
எங்குமே பனி படர்ந்து வருகிறது, பார்த்தாயா?
எனக்கோ பணி காத்திருக்கிங்கே .கேட்பாயா ?

நிலா நேசன் .