சொல்லத்தெரியவில்லை

~
என்னநடக்குமோ
ஏதுநடக்குமோ
சொல்லத்தெரியவில்லை
வல்லரசுகளின்
அதிகார ஆட்டமா
ஆண்டனின் செயலா
ஒன்றுமே புரியுதில்லை
ஓடித்திரிந்த கால்கள்
ஓய்ந்துகிடக்கிறது
விடிவதும் தெரியுதில்லை
கிழமையும் தேதியும்
சத்தியமாய்த்தெரியுதில்லை
வீட்டுக்குள்ளே இருந்து
தலையிடியும் ஏக்கமும்
வந்துவந்து போகுது
இந்த உலகமெல்லாம்
பரவிய கொடியகிருமி
எங்கிருந்து வந்ததோ
யார் செய்தபாவமோ
அழகான பூமியிலே
வாழத்தெரியாமல்
ஆணவம் கொண்டமனிதன்
ஆடிய ஆட்டத்தால்
மனித இனமே இன்று
ஏங்கித்தவிக்குது
எல்லா மனிதனும்
இறைவா உன்னையே
நாளும் தேடுகிறான்
ஓடியே வந்துவிடு
ஏக்கத்தைப்போக்கிவிடு

ஆக்கம் மயிலை யூர் இந்திரன்