சொல்வாயோ என்னுயிரே?

அன்னை தந்த தமிழே
உயிரெனும் மேலாய்
உன்னை நேசிக்கிறேன்
உன்னை பூஜிக்கிறேன்..

முத்தமிழாய் என்னுள்ளே
முக்கனிச்சுவை தருகிறாய்
முக்காலமும் அறிந்தவன்
சொல்லித்தான் போனானாம்..

எக்காலமும் உன்னோடு என்வாழ்வென
அவ்வாக்கை நீ மெய்ப்பித்தே
ஆழிதாண்டி வந்தும் நீங்காதென்னுள்
கனவிலும் நினைவிலும் நீயாகிறாய்..

காதல் செய்கிறேன் உன்னை
தூக்கத்திலும் கவிதைகளாய்
உளறுகிறேன் பிதற்றுகிறேன்
எனை பார்த்தோர் பைத்தியமென்றனர் ..

நித்தமும் உன்னோடு சித்தமெல்லாம் நீயாக
அக்கரை சீமையிலே பாடும் குயில் நான்
ஈழமண் தொட்டு பாடும் காலம் வராதோ
ஈழத்தமிழிச்சி எனும் பெருமையோடு…

சொல்வாயோ நீ என்னுயிரே
எனை ஆளும் உயிரின் ஒளியே❤️❤️❤️

ரதி மோகன்❤️