சோகங்கள் தீர வழிகளும் எங்கே கவிதை ஈழத் தென்றல்

ஏங்கும் உயிர்கள் வாடுது இங்கே
வாடிய பயிர்கள் ஏங்குது இங்கே
சோர்ந்த முகங்கள் சிரிப்பது எங்கே
சோகங்கள் தீர வழிகளும் எங்கே

நன்னீர் எல்லாம் பாழாய் போச்சே
கண்ணீர் ஒன்றே வரவாய் ஆச்சே
தேவைகள் எல்லாம் செலவாய் ஆச்சே
தேடிய செல்வம் கரைந்தே போச்சே

சோகங்கள் மட்டும் விளை நிலமாக
விதைத்தவை எல்லாம் பதராய் போக
குடிநீர் கூட விடமாய் மாற
குடியை கெடுத்தோர் நலமாய் வாழ

இன்றே இறைவா விதியை மாற்று
இடுக்கண் தீர வழியைக் காட்டு
சோகம் நீங்கி உன்னை நினைந்து
வாழும் வழியை எமக்கு காட்டு!

கவிதை  ஈழத் தென்றல்

Merken