ஜெசுதா யோ..!கவிதை ஜெசுதா யோ

விழியால் என்னை
கைது செய்தவன்
மொழியின்றி என்னை
மௌனமாக்கியவன்…!!

கற்பனைகளைக் கடந்து
காவியம் படைத்தவன்
காதல் என்னும் சொல்லுக்கு
அர்த்தம் புதுப்பித்தவன்…!!

அன்பென்னும் நூல்கொண்டு
அகிலத்தை ஆண்டவன்
ஆயுள் வரையும்
என் உறவானவன்..!!

தேடினாலும் கிடையாது
தேடாமலே வந்தவன்
என் இதயத்தை
கொள்ளை கொண்டவன்…!!

யாரிவனோ என்றெண்ணும் முன்
உறவாகிப் போனவன்
உரிமைகள் பல எடுத்து
உயர்வாகிப் போனவன்…!!

என்றும் என் உயிர்க் காதலன்…!!

ஆக்கம் ஜெசுதா யோ