ஞானம்..


சில
நேரங்களில்
சில
நூல்கள்
கலங்கரை விளக்கு..
பல
தருணங்களில்
பல
வடிவங்களில்
பட்டும்
தெளிவதில்லை.
வேண்டாம் என
விலகிடுவோரிடம்
மீண்டும் அன்பை
வேண்டுவது ஓட்டை
வாளியும் தண்ணீரதும்
கண்ணீர் கதைகளே!
பசி
அடங்கிய பின்
ஆகாரம் வழங்கலும்
மனம்வெறுத்து
ஒதுக்கிய பின்
அன்பு பாராட்டலும்
நன்றி நவிதலும்
நினைத்தால்
பெரு வலி.
பேசிப் பேசியே
யாரும் உனை
ஏமாற்றுவதில்லை.
மாறாக
அவர்கள் பேச்சில்
ஏமாறுவதே நீ.
என்பதே நிஜம்.
தேவை
தீர்ந்த பின்
தேனும்
திகட்டும் என்பது
முன்னோர்கள்
வாக்கு..
நுலைப் படி
சங்கத் தமிழ்
நூலைப் படி

ஆக்கம் கவிஞர் தயாநிதி