ஞாயிறு…..

நரை விழுந்த தரைபோல
திரண்டு கிடக்கும்
உறைபனிக்குமிழிகள்
சொட்டி நிற்கிறது குளிரை

உருகி ஓட வைக்க உதித்த ஞாயிறு
அந்திப்பொழுதில் அதிக சிவப்பை
தந்து போனாலும்
கனவுகள் மீண்டும்
பனித்திரளுள் உறைந்து போகிறது

வண்ணச் சேர்க்கையற்ற
வார்த்தைகள்
நினைவில் நனைந்து
மீண்டும் தீராத இரவுக்குளிரில் ஒரு
ஈரக்கவிதையை எழுதிச் செல்கிறது

மெழுகுவர்த்தியின் ஒளியில்
உருகிப் போகிற என் கனவுகள்
ஒரு பசியமாய்
உயிர்த்தெழலாம் ஒரு வசந்தத்தில்

சுபாரஞ்சன்