தந்தை என்பவர் கடவுள் கொடுத்தவரம் !கவிதை தேவதி

 

தந்தை என் அன்பின் இருப்பிடம்
தந்தை என் அரவணைப்பின்புகலிடம்
தந்தை என் நெஞ்சின் வரைபடம்
தந்தையிடம் நான் காண்பது
தெய்வத்தின் தரிசனம்

கைபிடித்து நடைபயின்றேன்
கதிர் ஒளியாய் நான்பார்த்தேன்
சின்னக்காலது நோகாமல்
சிறுநேரம் தோள்சாய்த்து
வண்ணக்கதை சொல்லி
வளர்த்த என் தந்தை
எண்ணக்கிடக்கைகளை
அவர் சொல்வார் அறிவேனே

ஒவ‌்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் க‌ிடைத்தவரம் தந்தை
ஓங்கி நாம் வாழ்ந்திடவும்
ஓடி வழி அமைப்பதும் அவர் வழி
சிந்தையதில் சிரம் தாழ்த்தி
கடவுள் கொடுத்த
வரமாகவே கடவுளாக கிடைத்தார் என்தந்தை
தந்தை தனை நான்வணங்கி
தந்தைக்காய் வாழ்த்துக் கூறும்
தந‌்தையர்தின வாழ்த்து

ஆக்கம் தேவதி தேவராசா

Merken

Merken