தமிழனாகிய நூல்கள்…

எல்லா திசைகளையும் 
அடைத்து 
புத்தியை கொல்லும் ஆயுதம் 
ஏந்தி நீறாக்கினான் எங்கள் நூலகத்தை…!

எங்கள் வளர்ச்சி பூமியின் எல்லை
வரை தொட்ட போதுமா 
உனக்கு இந்த கொடிய 
வியாதி ……!

நாங்கள் தீட்டிய புத்திச்செடிகள் 
பட்டுபோகும் என 
நினைத்தவனே
புரிந்து கொள்…!
நீறாகினும் 
பலம் நூறாகுவோம்…!

நாளைய கனவுகளுக்கு 
உயிர்கொடுக்கும் அறிவியல்
ஆன்மாக்கள் நாங்கள்

உலக அந்தாதியில் 
தமிழன் என்றும் முன்னோடியே….!
எனினும் கல்வியே எங்கள் மூலதனம்..

தே.பிரியன்