தமிழர்களின் தெருவிழா08.09.2018சிறப்பாக நடந்தேறியது


தமிழர்களின் முதலாவது தெருவிழா0808.09.2018 சனிக்கிழமை யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர்களின் முதலாவது தெருவிழா அட்டகாசமாய் நடந்து முடிந்தது. தமிழர்களோடு, பல நூற்றுக் கணக்கான யேர்மனியர்கள், பிறநாட்டவர்களும் விழாவைக் கண்டு களித்தார்கள். 3000 பேருக்கு மேற்பட்டவர்கள் வந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். யேர்மனிய பத்திரிகை ஒன்று 2000 பேருக்கும் அதிகமான தமிழர்கள் காணப்பட்டார்கள் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

வர்த்தகர்கள், இளையோர்கள், ஊடகத் துறையினர், கலைஞர்கள், பொதுமக்கள் என்று எல்லோருடனும் இணைந்து, இந்த வெற்றியை சாதித்திருக்கிறோம். வீதியில் இருந்து வாகனங்களை அப்புறப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தில் விழா ஒரு மணித்தியாலம் பிந்தி 12 மணிக்குத்தான் ஆரம்பமாகியது. வேகமாக நிகழ்ச்சிகளை நடத்தி, அறிவித்தது போன்று சரியாக மாலை 7 மணிக்கு நிகழ்ச்சியை நிறைவு செய்தோம்.

இதில் ஐபிசி,  எஸ்ரிஎஸ் தமிழ் ரிவி,ஐரிஎன்,தமிழ்எம்ரிவி, வெற்றிமணி போன்ற ஊடகங்களும், சில கலைஞர்களும் எடுத்து, அவர்களின் முகநூலில் வெளியிட்டிருக்கின்ற படங்களில் சிலவற்றை இங்கே . அடுத்த ஆண்டு தெருவிழாவை மேலும் பிரமாண்டமாகச் நடைபெறும்