***தமிழ் கவி மகுடம்***கவிதை தமிழ்காவிநேசன்

 

காவியத்தமிழ் அன்று மகுடம் சூட்டி
——கண்டங்கள் ஆண்டதுண்மை-அதை
கவிழச் செய்து பிறமொழிகள் மீது
……..காதல் மோகம் கொண்டோம்.
கவித் தமிழ் காலப்போக்கில் தானே
……கரைந்து கட்டெறும்பானது இன்று,
கவிகள் சிலரின் கண்காணிப்பிலாவது
……கண் விழிக்கட்டும் தூய தமிழ்.
கவிதைகளைப் படைப்பதை விட
…..கரிசனையோடு படித்துப் பாராட்டுவதே
கவிழ்ந்த தமிழ் நிமிர்ந்து நிற்க நாம்
…..காட்டும் முளுப்பணியாகும்
ஆக்கம்  தமிழ்காவிநேசன்