**தவித்த வாய்***

தடாகம் அமைத்து அழகிய
தாமரை வளர்க்க, அவளொன்றும்
தண்ணீர் கேட்கவில்லையே!!
தாய் சகோதரர்களே என்றும்
தந்தைக்கு ஒப்பானவர்களே!!
தங்கள் தமிழ் மகளானவள்,
தன் வயிற்றில் வளர்ந்து
தவித்து நிற்கும் சிசுவின்
தாகம் தீர்க்கவே ,பாவம்
தன்னுடைய வறண்ட
தண்ணீர்ப்பையை நிரப்பவே
தங்களிடம் இரந்து
தானம் கேட்கிறாள்.
..
நீர் நேசன்