திசைக்கொரு கோபுரம் !கவிதை ஜெசுதா யோ

திசைக்கொரு கோபுரம்
மேகங்களைத் தாண்டி
விண்ணைத் தொடும் முகடுகள்
கண்ணையும் கருத்தையும்
கவரும் அற்புதமான சிற்பவேளைகள் நம்
கலைப் பொக்கிஷங்களே

மனித உறுப்புக்களை
கோவில் வடிவத்தில்
அமைத்தல் அழகிய
எண்ணம் தானே ..

தாயின் கருவறை போல
தமிழக் கருவறையாம்
நம் சிந்தையெல்லாம்
நிறைந்த எம்பெருமான்
கர்ப்பக்கிரகம் பெருமையே

ஆன்மாவின் தரிசனம்
ஆகம விதிகள் நிறைந்த
ஆண்டவன் முன்றலில்
எத்தனை மகிழ்வுகண்டோம்

கோபுரத்தை பார்த்தாலே
உள்ளூர ஆனந்தமே
உள்ளே நுழைந்ததும்
மொழிகள் மௌனமாகி
மனங்கள் மட்டும் பேசுகிறது

துன்பம் நீங்கி இன்பம் மட்டுமே
இதயத்துள் எங்கும் வியாபித்திருக்க
இறையருள் பெறுமே
மதங்கள் தாண்டிய
மனங்களிங்கே..

ஆக்கம் ஜெசுதா யோ