திசை மாறிய பறவை.!

திக்கு திசை தெரியாத வெளியில்
திசை மாறிய பறவை
தாயுமில்லை உறவுமில்லை
கண்ணுக்கு தொலைவான தூரம்வரை
காக்காய் குஞ்சும் தெரியவில்லை
நெஞ்சில் பயம் அதிகமாகிறது
சிறகுகள் விரிக்க முடியவில்லை …!!
சீரான வேகத்திலும்
இதயம் துடிக்கல்ல
மருளுது என்னிதயம்
உருளுது என் விழிகள்
ஒலி கூட எழுப்பமுடியல்ல
ஒட்டிக் கொண்டன உதடுகள்
அசைவின்றி என் கால்கள்
அச்சதில் நடுங்குது
இத்தனையும் உண்டானது
எல்லைகள் தாண்டும் நொடிகள்
எஞ்சிருக்கும் உயிர்கொண்டு…
 ஜெசுதா யோ