திருகோணமலை மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

திருகோணமலை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களை மையப்படுத்தி அவர்களுக்கான கற்பித்தல் முறையை இற்றைப்படுத்தும் நோக்கில் கருத்தரங்கு ஒன்று 14.07.2017 காலை 9 மணி தொடக்கம் 4 மணி வரை உவர்மலை விவேகானந்தக் கல்லூரி பிரதான மண்படத்தில் நடைபெற்றது.
.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபர் ந.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நான் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டேன். கிழக்கு கல்வி அமைச்சின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. விஜயானந்தமூர்த்தி அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். கருத்தரங்கில் ஏறத்தாழ 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.