திரு. திருநாவுக்கரசு சிறீதரன் கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீடு!!

நூலாசிரியர் திரு. திருநாவுக்கரசு சிறீதரன் (சுகு) அவர்களின் ஆக்கத்தில் உருவான „மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக“ எனும் நூல் வெளியீடு 08.05.18 செவ்வாய்க்கிழமை அன்று Kopf str-25,12053 Berlin எனுமிடத்தில் அமைந்த மண்டபத்தில் மிகச்சிறப்பாகவும் எளிமையாகவும் இடம்பெற்றது.
இவ்விழாவானது அகவணக்கம் வரவேற்புரை ஆகிய ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பித்ததைத் தொடர்ந்து நூலாய்வு இடம்பெற்றது. இந்நூலாய்வினை திரு .சுசீந்திரன் நடராஜா அவர்களும்,திருமதி.உமா அவர்களும் சிறப்பாக நடத்தினர்.மேலும் இந்நூலினை திரு.பொன்னையா கருணாகரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைத்ததுடன் முதற்பிரதிகளை திரு.இயேசு பெர்ணான்டோ,திரு.குமாரசாமி இராசலிங்கம் திருமதி.சாந்தாதேவி,திருமதி.வசந்தமலர் சோதிலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருமே இந்நூலைப் பெற்றுக்கொண்டதோடு, நூலாசிரியர் கருத்துரையும், அவையோர் கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றது .இந்நிகழ்வினை திருமதி .ஞானகௌரி கண்ணன் அவர்கள் தொகுத்து வழங்கினார் .கருத்துப்பகிர்வுகளைத் தொடர்ந்து தேநீர் விருந்தும் நூலாசிரியர் கௌரவிப்பும் இடம்பெற்று இறுதியாக திரு.பத்மநாதன் நடராஜா அவர்களின் நன்றியுரையுடனும் „பருந்தும் கிளியும் ஒரு கூட்டில் ஒற்றுமையாக வாழும் உலகு செய்வோம்“ எனும் கோசத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
இவ்விழாவின் சில நிழற்தொகுப்புகள்..,,