துணை…..கவிதை கவிஞர்தயாநிதி

நிலை மாறும்
உலகில்
நிறம் மாறும்
காதலும்
உண்டு. மாறாத
நிஜங்களும்
இல்லாமலில்லை…

ஆரம்ப தேடலில்
வேகம்
வயப்படும் போது
தாகம்.
வாழ்க்கை படும் போது
மோகம்…

மோகம் 30 நாள்
ஆசை 60 நாள் எனும்
காலாவதியான
எழுதாத சட்டம் இன்று
சாத்தியமில்லா
சங்கதிகளே….

பின்னாளில்
பேச்சுத் துணைக்கும்
அரவணைப்புக்கும்
ஆதரவாக ஒரு
துணை அவசியமானதே…

எத்தனை சுகம்
எத்தனை அமைதி
அத்தனையும்
தேடிய துணையால்
கிடைப்பதில்
பேரின்பமன்றோ…

ஆக்கம் கவிஞர்தயாநிதி