துன்பம்..!கவிதை கவிஞர் தயாநிதி

 

இழுத்துப்
பிடிக்கும்
இன்பம்
நான் தான்
என மயக்கும்.!
இம்சைப் படுத்தும்.

மூடி
திறக்கும்
வரையில்
மௌனம்
காக்கும்;
ஈற்றில்
மூடி
திறந்தவனையே
துரத்தும்..!

ஆட
வைக்கும்
பாட
வைக்கும்
பாடையிலே
போக
வைக்கும்…!

மது
து..வில்
முடிவதனால்
துன்பத்தின்
தொடக்கமாகும்;
மதுவின்
பிரதான
உணவு
மனித ஈரல்.!

சட்டம்
பேசும்
கட்டம்
கட்டமாய்
சுருதி குலையும்
சத்தம் கூடும்
நித்தம்
குழப்பும்
நிதானம்
தப்பும்
குடும்பம்
குலையும்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி