துயரம் விடு துணிந்து நில்! கவிதை ஈழத் தென்றல்

ஆதி என்றால் அந்தமும் உண்டு
துவக்கம் என்றால் முடிவும் உண்டு
துவண்டு போனால் துயரம் கண்டு
துன்பம் ஒன்றே வெல்லும் நின்று

துயரம் தொலைத்து துணிந்து நில்லு
வெற்றி ஒன்றே நினைத்து வெல்லு
இறைவன் அன்பை நெஞ்சில் கொள்ளு
சோகம் என்பதை துரத்திக் கொல்லு

அன்பே என்றும் உலகை வெல்லும்
ஆசை மட்டும் மமதை கொள்ளும்
மனதை அமைதிப் பூக்கள் பூத்தால்
நாளும் பொழுதும் நிம்மதி அன்றோ

துயரம் வேண்டாம் துணிந்து நிற்போம்
பேராசை என்பதை அறவே மறப்போம்
அமைதிக்கு என்றும் அரணாய் நிற்போம்

ஆக்கம் ஈழத் தென்றல்