****தூய்மைப் பேச்சு ***கவிதை கனிவுநேசன்

இனிமையான இந்தவாழ்வை எம்மவரேனோ
………..இன்னலுக்குள் இட்டுச் செல்கிறார்கள்,
பணிவை மனதில் படரவிட்டுக்கொஞ்சம்
……….பாசத்தை அதில்தூவி பருகிப்பாருங்கள்,
கனிவான கதைப்பேச்சு கண்டனமில்லா
……..கலந்துரையாடல் கசப்புகளைக்காட்டாது,
தனிமை தேடித் தானொதுங்கிப் போதலும்
………..தரமான வாழ்வைத் தாழ்த்துவதேயாகும்,
துணிவை வளர்த்து தூய்மைப் பேச்சால்
……..துயரைத்துரத்தி தித்திப்பாய் வாழ்வோம்

ஆக்கம்கனிவுநேசன்