.
தெய்வம்
என்றார்கள்
வழிபாடும்
செய்வார்கள்
அம்மனென்பார்கள்
அருள் புரி
நாயகி என்பார்கள்..
எண்ணிக்கை
தாண்டிய
திருநாமங்கள்
தேவார பதிக
பக்தி பாடலரசிகள்.
எழுத்தோடும்
பேச்சோடும்
கவியோடும்
கட்டுரையோடும்
விரிந்தவர்கள்….
வீட்டுக்குள்
அடிமைகளாய்
வீதியிலே
விளம்பர தாரகைகளாய்
வியாபார
நுகர் பண்டமாயினர்…
ஆற்றலையடக்கி
ஆர்வத்தை முடக்கி
அவைதனில் மடக்கி
அனுதினமும் ஒடுக்கி
ஒப்புக்கு ஒப்பனையில்
திக்கற்றவர்…
மொழியறிவும்
நிர்வாகத் திறன்
தனித்துவம் கண்டும்
தாமாக தம்மை
உணர்ந்திட மறுக்கும்
பூவையர் விழிக்கும்
காலம் வெகு தூரமில்லை..
ரி.தயாநிதி