தேடலில் உள்ள சுகம் .!கவிதை கவித்தென்றல் ஏரூர்

புலம்பலும் விழுந்தது என் காதினில் – அவள்
புரிதலை உணர்ந்தேன் காதலில்
கவலையும் கடந்தது என் வாழ்வினில்
கண்ணீரைக் கரைத்தாள் என் காதலி..

சகலதுமானாள் என்னுள் அவள் நிழலா..
சபலமும் தந்தது அவளது செவ்விதழா..
திலகமிட்ட சுந்தரி அழகு நிலவா..
தினமும் வட்டமிட்டாள் வந்து இரவில் கனவா..

தேடலில் உள்ள சுகம் தேவையில்லை
தேவதைக் கண்டவர்க்கு எந்த தேவையுமில்லை
வரமளிப்பவள் தேவதையாம் நான் நம்பவில்லை
விலைமதிப்பென்பேன் அவளைவிட ஏதுமில்லை

உதிரும் புன்னகையை என் கவியில் வைத்தேன்
என் உயிரை கழுவி அவள் விழியில் காமித்தேன
உறவைக் கொள்ள தினமும் அவளை நேசித்தேன்
என் உடலுக்குள்ள அவள் உயிரைச் சேமித்தேன்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்

Merken

Merken