தேடுகின்றன;கவிதை கவிஞர் தயாநிதி

இன்று
இருப்பிடம்
இல்லை
அணைத்திட
யாருமில்லை
இருள்
கவ்விய
வாழ்வுக்குள்
இடர்
கொண்டு
அலைந்தாலும்
இவள்
நம்பிக்கை
மட்டும்
அணையாத
சுடராக;;;;;;
வருவான்
என் பிள்ளை
வருவான்
என விறைத்த
விழிகள்
ஆகாயம்
நோக்கி
அகல விரிந்த
படி;;;;
களம் போனவன்
காணாமல்
போனவன்
வெள்ளை
வானோடு
போனவன்
பட்டியல் நீள
பார்த்திருக்கும்
அன்னைக்கு
விடையேதும்
உண்டோ;;!

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken