தொலைத்துவிட்டேன்

உன்னை நினைப்பதை நான் இப்போ நிறுத்திவிட்டேன் முன்னை நினைவுகள் அனைத்தையும் அழித்துவிட்டேன் நீ கொடுத்ததையெல்லாம் இன்று தொலைத்துவிட்டேன் அடுத்தவள் கையை நீ பிடித்ததினால் எடுத்தெறிந்தே உன்னைமறந்துவிட்டேன் .பழகிய தோஷத்தில் நினைத்திருந்தேன்பகலிலும் உனைப்பற்றி கனவுகண்டேன் -மனதினில்முழுமையாய் உன்னை வரித்திருந்தேன்-தலைமுழுகியே உனை இன்று மறந்துவிட்டேன்கடற்கரை சென்றும் கலங்கி நின்றேன்கடலலையிடம் சோகத்தை சொல்லி வைத்தேன்நிலவினை நிமிர்ந்து நான் பார்த்துக் கொண்டேன்நிதர்சனம் என்னவென்று கேட்டு வைத்தேன்இழகிய மனம் எனக்கிருந்ததனால் -என்னைஇழக்காரமாய் நீயும் நினைத்துவிட்டாய்இதயம் உனக்கு இருந்ததென்றால் இதமாக அதனிடம் அறிந்துகொள்வாய்.

கோவிலூர் செல்வராஜன்