தொலைத்த கல்வி!கவிதை தே.பிரியன்

கல்வியை விட்டு கல்யாணம் வந்தாலும்
கற்ற கல்வியை கைவிடாதே பெண்னே

முத்திரை பதிப்பாய் நித்திலம் தன்னில்
சிலர் முகத்திரை கிழிப்பாய் அவர் முன்னில்

கணவனை கண்டு கலக்கம் வேண்டாம்
கனவை நினைத்து கல்வியில் மூழ்கு

கணவனும் உன்னுடன் கை கோர்ப்பான்
கண்மணி உன் புகழ் காதலில் மிதக்கும்

கல்வியை தொலைத்தேன் என்று நீ ஏங்காதே
காலம் உன்னை கவரும் கனவை வெல்வாயே

ஆக்கம் தே.பிரியன்