தொலைந்த கனவுகள்.

கயவர்கள் வாழும் பூமியில்
கறை பட்ட ரோஜாவே
களங்கம் உன் விதியில்லை!

கயவர்களே கறை படட்டும்,
தலையெழுத்தை மாற்றி விடு
தைரியம் இழக்காதே!

அதோ பார் தெரிகின்றது
இருண்ட வானத்தில் உறவாய்
வெள்ளி நட்ச்சத்திரம்!

கலங்கிடாதே காலம் கை கூடும்
உறுதியுடன் நடை போடு
வெற்றி நிச்சயம் உனதே!

ஈழத் தென்றல்