தொழிலாளர்தினம் மே1ஆக்கம் மயிலையூர்இந்திரன்“

 

உழைப்பே முதலீடு
உயர்வதே குறியீடு
ஏர்கலப்பை கையோடு
எருதுகளோ துணையோது
வியர்வையோ மண்ணோடு
விளையும் பயிரோ மனதோடு
என்று வாழும் விவசாயியே
வேலை செய்யும் தொழிலாளியே
களங்கமில்லா உழைப்பாளியே
உங்கள் கரங்களை முத்தமிடுகிறேன்
நீங்கள் நலமோடு தினம்வாழ வாழ்த்துவேன்
நீங்களே நாட்டின் முத்துக்கள்
நீங்களே நாட்டின் சொத்துக்கள்
அடுத்தவன் சொத்தை எடுப்பவன்
வாங்கியகடனை கொடுக்காத
மானங்கெட்டவன் இருந்தும் பிணமே!
நீ வாழும்வாழ்வே உனக்கு பெருமை சிறப்பு

ஆக்கம்கவி-மயிலையூர்இந்திரன்“