நட்புக்கோர் சரம் !கு.யோகேஸ்வரன்

மல்லிகையும் முல்லையுமாய் மலர்ந்திருந்தோம்
மலர்ச்சரம் தொடுத்தே
மலர்ச்சோலை ஆனோம்,

முகமறியா முகநூலில்
முகம்மலர உலா வருகின்றோம்,
அன்பை மட்டுமே அளவளாவி நல்லதோர் நன்பர்களாய் நாளும் மலர்கின்றோம்,

வஞ்சம் சூது
வார்த்தையில்
சுடு சொல்லில்லை.

எண்ணத்தில் உண்மை
எங்களின் நட்பே சான்று,
பனித்துளி பட்டு நித்தமும் சிலிர்த்திடும் இதழ் கண்டு
மனம் மகிழ்வுறும் என்றும் „

அன்பு மட்டும் காதலாய்
பெருகவேண்டும் நட்புக்குள் அதுவே என்றும் மலரவே அன்பு நிறை நன்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் „

அன்புடன்


கு.யோகேஸ்வரன்