நண்டுக்குழம்பெண்டால்நாவூறும் !கவிதை நண்டுநேசன்

 

நண்டுக்குழம்பெண்டால் நாவூறும்
கண்ட உடனேயே நாக்கு
மிண்டு விழுங்கும் உமிழ்நீரை.
திண்ட போது சுகமான எரிவு
சொண்டுக்கும் நாவுக்கும் வரும் .
இண்டைக்கு எங்கள் வீட்டில்.
நண்டும் சோறும் நல்ல வறையும்.
பெண்டிலின் கையால் சமைத்த
நண்டுக்கறியை நாருசிக்க
உண்டு களித்தல் தனி சுகம்
உண்ட களை தீர கொஞ்சம்
மண்டைசரிதல் பரம சுகம்

ஆக்கம் நண்டுநேசன்

Merken