நண்பர்களுக்கு நிறைவான வாழ்த்துக்கள்..கவிதை கவிஞர் தயாநிதி

அழகிய
நட்பு
பெரு வரம்…

இங்கே
உணர்தல்
புரிதல்
பரஸ்பரம்
விட்டுக்கொடுப்பு
பாதுகாப்பு
என பட்டியல்
நீளும்….

உண்மை
இருக்கும்
உயிர் துடிப்பிருக்கும்
சுயநலம்
மன எல்லையை
தாண்டி நிற்கும்…

நம்பிக்கை
தும்பிக்கை
பலமாகவே
படர்ந்திருக்கும்.
இப்படியான
தகுதிகளுடன்
நட்பினைப் பெற்றவர்
எவர்களோ
அத்தனை பேருக்கும்
இன் நாளில்
நிறைவான
வாழ்த்துக்கள்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி