நம்பிக்கை துரோகம் !கவிதை ஜெசுதா யோ

நம்பிக்கை துரோகம்
அளவுக்கதிகமான
அன்பின் பின்னும்
அளவுகடந்த நம்பிக்கையும்
உள்ள இடத்தில்
கடந்து போகிறது

மனச்சாட்சியில்லாத
மனிதர்கள்
பிறர் மனங்களைக்கொன்று
புசித்துப் போவது
துரோகத்தின் எதிரொளியே

நட்பில் ஒரு துரோகம்
காதலில் பல துரோகம்
உறவில் கனதியின்றி
கடந்து போகும்
மனமாற்றங்கள்
துரோகத்தின் இன்னொரு சாயலே

வாழும் காலம் மறத்து
மரித்துப்போன
மனச்சாட்சியோடு
நாளும் கடக்க
சொல்லும் பொய்கள்

பல மனங்களைக்கொன்று
தன் சுயநலத்திற்காக
சுய இன்பத்திற்காக
இயலாமையின் வடிவம்
ஏமாற்றிப் போவது
நம்பிக்கைத்துரோகத்தின்
இன்னொரு வடிவமே…

ஜெசுதா_  ஆக்கம் ஜெசுதா யோயோ