—-நாங்கள் கள்ளிகள் —-


கோவலனாக இருந்தாலும்,
கோமகனாக கிடைத்தாலும்,
கொண்டவனோடே குப்பை
கொட்டும் கதை காலாவதியானதின்று .
*
சவாலாக வாழ்வை ஏற்று
சாதித்து வாழ்ந்து காட்டி
சாட்டையடி கொடுத்து நிற்கும்
சரித்திரப் பெண்கள் நாங்கள் .
*

கேவலமான கண்கள் கொண்டு
கேளிக்கைப்பொருளாய் எமைநோக்கும்
கேட்பாரற்ற ஆண்கள் வர்க்கத்திற்கு
கெளுத்தி முள்ளாகுவோம் இனி ,
*
காவலர்களாக எம்மை நாமே
காத்துக்கொள்ளும் கலையை
கற்றுக்கொண்டு -,தீட்டிடுவோம்
கத்தியாய் எங்கள் புத்தியை ,
*
லாவகமாக பெண்களை மயக்கி
லவ்வீக மதுவை அவளுக்குப் பருக்கி,
லாலியாக மாதுவாட எண்ணும்
லச்சையற்ற கோமான்களே !!!
*
காலனாக மாறி உங்கள்
கண்களைக் கொத்தவென்றே
காத்துநிற்கும் வெறும் பெண்களில்லை .
கள்ளிகள், ஆம் ,நாம் பெண்கள்ளிகள்!!!
மாதுநேசன்