நா காக்க…

அளவான
வார்த்தைகள்
அழகானவை..
எல்லைகள்
நாடுகளுக்கு
மட்டுமல்ல உன்
நாவுக்குமானதே..
சாதத்தை
சிந்தினால் கூட்டி
அள்ளி விடலாம்…
வார்த்தைகளை
கொட்டினால்
வலிகளே வசமாகும்..
ஆயுதங்களில்
அதி பயங்கரமானது
அகிலத்தில் நாக்கு
அதை காக்க கற்றிடு..
மூச்சுக்கும்
ஆகாரத்துக்கும்
அளவோடு திறந்திடு
ஆரோக்கியமாகிடும்..
நலன் காக்க
நா காத்து பழகிடு
நாட்டுக்கும் வீட்டுக்கும்
அதுவே நல்லது.

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி