நித்திய தேவியர்

காற்றை கிழித்த
கந்தக மேனியர்,
என்றும் எம் வாழ்வின் 
நித்திய தேவியர்,

யாருக்கும் அஞ்சாத 
மறத்தமிழ் புதல்வியர்,
யாதுமாகி நிற்கும் 
எம் குல சாமிகள்,

சாவை ருசித்து 
காவியம் படைத்த 
எம்மின வேங்கைகள்,
அடுப்படி நெருப்பாய்
ஆர்த்தெழுந்த எங்களின் 
மங்கைகள்,

காவியம் எல்லாமே 
உன் வீரியம் பார்,
காந்தள் தேசத்தில் 
வார்த்தெடுத்த போரியல் கேள்,

இன்னல் கண்டு எழுவாய்,
வன்முறை கண்டு கொதிப்பாய்,
ஊதிடு சங்கை எடுப்பாய்,
உலகப்பந்தின் என்றுமே 
நீ எம் துடுப்பாய்,

எழுக பெண்ணினமே! எழுக!

தே,பிரியன்