******நிறையாத தாபம்*******

வெண்தாவணியிட்ட மார்பழகி,
செம்மருதாணியிட்ட காலழகி,
உன்நெடுங்கூந்தல் நனைகையிலே
என்நெஞ்சம் ஏனோ ஏங்குதடி .
*
மோகக் குளத்தில் என்னை
மூழ்க விட்டு ,நீ மட்டும்
மெல்லக் கரையேறி நின்று
மண் பார்க்கும் மாயமென்னடி.
*
பளிங்குப் பாதங்களை அந்த
படிக்கட்டில் வையாதே!!
பூவென்று எண்ணி வந்த
பூங்குருவி தீண்டிடப்போகுதடி
*
கருங்கூந்தல் கலைந்ததுகண்டு
கனமழை வருமோ என்றெண்ணி
கானகமயில் அகவி அதன்
காதலியை அழைக்குத்தடி .
,
*
நிர்மல நீலோற்பலம் ஒன்று
நிதர்சனமாகுது என்முன்-இன்று
நீராடி நீமுடித்த நீர்த்துளிகள்கொண்டு
நிறைகிறேன் என் தாகம் தீர்த்து
*** மோக நேசன்