நீதான்..


பிடி விட்டு
போனாலும்
அடி நெஞ்சில்
நீ தான்……..

பொடி வைத்து
பேசாதிரு.
நடிப்பவர் பலரை
பார்த்ததுண்டு..

கடி பட்டு
பிரிந்திட வெறும்
எலும்புத் துண்டுக்கா
அடிதடி.

உயிருள்ள
உணர்வுக்கும்
உருவமில்லா
காதலுக்கும்
சாட்சிகள் இல்லாத
ஒப்பமிட்டோம்..

ஏப்பம் விட்ட
கதையாகி
ஒப்புக்கு ஒத்திகை
வேண்டாம்.
மனதுக்குள் தீ
சத்தியத்தை மதி.

காட்சியும்
காணமுமாய்
ஓடி மறைவதல்ல
காதல். உயிருள்ளவரை
போராடு.
வெற்றி நமதாகும்.