நீதி வென்றது !

சின்னமலரை சிதைத்தபாவியர்
சிறைக்குள் இனி வதைபடுவர்
துள்ளி ஓடும் புள்ளிமானை
கொள்ளிவைத்த பாதகர்கள்
கொடும்வதை இனிச்சாகும்வரை
பாதகச்செயல் புரிய உங்களுக்கு
எப்படித்தான் மனம்வந்ததோ
நீதிக்கு முன்னால் அநீதி நிற்க்காது
நீதிமான்களே கல்விமான்களே
மதிப்புக்குரிய நீதிபதிகளே
தர்மத்தைக்காத்த பெரியோர்களே
தமிழினம் உங்களுக்கு
கோடிநன்றி சொல்கின்றது
சீரழிந்து போகும் எங்கள்
நாட்டை,இனத்தை சீராக்குங்கள்
வாள்வெட்டு அடிதடிகள் கொலை
கொள்ளை அடுத்தவன் சொத்தை
அபகரிப்பவர்களைத்தண்டியுங்கள்
உங்கள் கையிலேதான் இன்று
எங்கள் தேசமும் மக்களும்
நீதிமான்களே உங்களுக்கு
மீண்டும் எங்கள் நன்றிகள்
புலத்தில் வாழுபவர்களின்
சொத்துக்களை தமதாக்கிய
பாவியர்களையும் கூண்டிலே
ஏற்றுங்கள் தண்டியுங்கள்
வழக்குகள் இழுத்தடிக்காமல்
தீர்ப்புக்கூறுங்கள் ஐயா
நீதி வென்றது தர்மம் வென்றது
உங்கள் பெயர் வாழும்
– வாழ்த்துக்கள் நீதிமான்களே-
ஆக்கம்  மயிலையூர்இந்திரன்