நீருஜன் செகசோதி பற்றி நயினை விஜயன்.

நீருஜன் செகசோதி ! ஒரு பிறவிக் கலைஞன். யேர்மனியில் பிறந்து வளர்ந்து தமிழிசை பயின்று ஐரோப்பாவில் பல் மேடைகளை அலங்கரித்த துடிப்பான இளைஞன். தமிழிசையில் (கர்நாடக சங்கீதம் ) முறைப்படி பயின்றவர்.இன்று அகிலமெங்கும் புகழ் பரப்பி நிற்கும் ஒரு ஈழத்தமிழ் இளைஞன்.விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், இறுதிச்சுற்றுக்கு தெரிவாக உங்கள் ஆதரவை நாடி நிற்கிறார்.அவருடைய திறமையை நீங்கள் நேரடியாகப் பார்த்திருப்பீர்கள். நடுவர்களின் பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருக்கும்
நீருஜன் இறுதிச்சுற்றில் கால்பதிக்க உங்கள் வாக்குகளை அள்ளி வழங்குங்கள்.திறமையான ஒரு கலைஞன் இறுதிச்சுற்றிலும் தனது திறமையை காட்டட்டுமே. உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் திறமைக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் , அந்த வகையில் நீருஜனின் அபாரத்திறமையை நேரடியாகக் கண்டவர்கள் நிச்சயமாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை நீருஜனுக்கும் உண்டு.ஜெசிக்காவை தொடர்ந்து இன்னுமொரு ஈழக்குயில் வெற்றிவாகை சூட்டட்டும்!
-நம்பிக்கையுடன் நயினை விஜயன்.
எசன் நுண்கலைக்கல்லூரி -யேர்மனி