„நீ பேசிக் கொண்டால்“ பாடல்.25/05/2018 வெளியிடவுள்ளது

சுபர்த்தனா படைப்பகத்தின் அடுத்த வெளியீடு ஸ்ரீ நிர்மலன் இசையமைத்துப் பாடிய „நீ பேசிக் கொண்டால்“ பாடல்.
நான் எழுதி எனக்குப் பிடித்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலை நிச்சயம் ரசிப்பீர்கள். ஸ்ரீ நிர்மலனுக்கு நிறைந்த பாராட்டை இந்தப் பாடல் பெற்றுக் கொடுக்கும்.
„மெளனமாக நீ இருந்தாலும்
இதயம் போடுது தாளமே
சொல்ல மறந்து நின்றாலும்
உன்னுள் எழுகுது ராகமே.“
இளமை துள்ளும் சிறப்பான இசையில் உருவான இந்த அழகான காதல் பாடலை 25/05/2018 வெளியிடவுள்ளோம்!