நூல் வெளியீடும் ஆவணப் படத் திரையிடலும்

வரும் 11.02.2018 ஞாயிற்றுக் கிழமை நாம் நடத்தவுள்ள க.வாசுதேவன் அவர்களின் பிரஞ்சுப் புரட்சி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும்படி தங்களை அன்போடு அழைக்கின்றோம். நூல் பற்றிய பார்வைகளும் நூலாசிரியருடனான கலந்துரையாடலும் இடம் பெறும்.

இந் நிகழ்வில் ‚புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்‘ ஆவணப்படமும் திரையிடப்பட்டு, அது பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெறும்.

இந் நிகழ்விற்கு தங்களை அழைப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்.