நெடு் சுகம்..

தொட்டு
விடும் தூரத்தில்
பட்டுத் தெறிக்கும்
நெடு சுகம்.
தனிமை
தரும்
தொடர் சுகம்
சொல்லல் விட
அனுபவி…
உனக்கானதும்
எனக்கானதுமல்ல
விருப்பானதும்
நெருப்பானதும்
தனிமை…
உனக்கான
தனிமை வெளி
தனை நீயாக
உருவாக்கு…
அடுத்தவனால்
தனிமைக்குள்
தள்ளும் நிலை
தவிர் . எழு..
இனி
வா தனிமையின்
இனிமை பகிரலாம்..
சுவையறி.
அந்த
வானத்து
ஒற்றை நிலா..
இதயத்து நிலாவதனை
எண்ணி அணை.
மன
முற்றத்தில்
சுற்றம்
மறக்க வைக்கின்றதே…
பார் பாரிது.
இனம்
புரியாத
எழுச்சி
எவர்க்கும் அஞ்சாத
கிளர்ச்சி…
எழுதிப்பார்
எண்ணம்
விரியும்.
சுவைத்துப்பார்
சுவர்க்கம் தெரியும்..
இமை
மூட முடியாத
உன்னத நிலை.
உச்சம்
தொடும் உன்னத
உயர் நிலை..
ஏதும்
சொல்லாமலே
அழைக்கின்றது
ஏகாந்த வெளி
எனக்காக
உருவான தளம்.
ஆகாய
வெளி தரும்
ஆனந்த பறப்பு
பறக்கலாம்
தனிமைக்குள்….
வா பறக்கலாம்…

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி