நேசிப்பில்….!கவிதை கவிஞர் தயாநிதி

 

மம்மி டடி
அன்ரி அங்கிள்
லெவ்று றைட்டு
ஜிம்மி ஜொனி
என தமிழர்
நாவில் ஆட்சி
நடத்துகின்றது
ஆங்கிலம்.

பெயர்ப் பலகையில்
தமிங்கிலம்
கரும்பலகையில்
தமிங்கிலம்
இவ்வாறு தமிழை
ஆங்கில திமிங்கிலம்
ஆட்கொண்ட துயரம்
தமிழ் நாட்டில்
தலை விரித்தாட
மொழிக்கு முன்னுரிமை
சிங்கப்பூரில்….

மொழி ஒரு
இனத்தின் அடையளம்
விழிக்க மறந்தவர்
பழியைச் சுமப்பர்
தமிழ் இனி
மெல்லச் சாகும்
எனும் சாபம்
சாத்தியமாகி விடும்.!

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken