நோய்…!கவிதை கவிஞர் தயாநிதி

 

உறக்கம்
இன்றி அலையும்
ஓநாய்கள்…

இரக்கம்
என்பதறியாத
காமப்பிசாசுகள்..

கூச்சமும்
அச்சமுமறியாத
வெறிநாய்கள்

அம்மா
அக்கா தங்கை
உணராத சதை
தின்னி பிண்டங்கள்,

பெண்
என்றால்
பேயும் இரங்கும்
என்பார்கள்..

இது
அதுகளையும்
தாண்டிய
ஈனர்கள்…

இது ஒரு
தீரா நோய்
மரண தண்டணை
ஒன்றே
மாமருந்தாகும்,,

ஆக்கம் கவிஞர்தயாநிதி