பசுமைக்காதல் குறும்படத்தின் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியீடு

சமுகப்பணி பட்ட மாணவன் ருவுதரன் சந்திரப்பிள்ளையின் இயக்கத்தில் உருவாகிவரும் பசுமைக்காதல் குறும்படத்தின் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் கவர்ந்து வருகின்றது.இது இவரின் இயக்கத்தில் உருவாகும் ஆறாவது குறும்படம் ஆகும். இதில் இலங்கையின் பிரபலமிக்க பிரகாஸ் சஞ்ஜேய் போன்ற நடிகர்கள் நடித்திருப்பது சிறப்பம்சமாகும்.இதற்கு அஜய் ரேமினாத் ஔிப்பதிவினையும் யாசிர் நிசார்தின் படத்தொகுப்பினையும் மேற்கொண்டுள்ளனர் மேலும் இதற்கு உமப்பிரியன் இசையமைத்துள்ளார். இக்குறும்படத்தை தயாரித்துள்ள அம்மா கிரியேசன் இதனை ஜீன் மாத சுற்றாடல் தினமன்று வெளியிடஉள்ளதாக தெரிவித்துள்ளனர்.