படம்..

புரிந்தவர்க்கு
படமொரு பாடம்.
புரியாதோர்க்கு
வெறும் படம்.

பந்தா
காட்டுவதில்லை
பாயும் போதே
பலத்தை காட்டும்.

வாய்
வீரம் வினையாகும்
செயல்
வீரம் கண்கூடாகும்..

வெறும்
எழுத்தும் பேச்சும்
ஏளனத் திமிரும்
ஏலாமையின் திறவுகோல்.

செய்
அல்லது செத்து மடி
பொய்யில்லை
மெய்யென காட்டிய இனம்.

வலிக்கும்
வார்ப்புக்கள்
பழிகளை சுமக்க 
வைத்திடும்.விழி
விடியலுக்காய் விழி..

கவிஞர் தயாநிதி